கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்




முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்களைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இன்று அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் கணக்காய்வாளர்கள் இருவரிடம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :ப்ளாக்கர்
பதிப்புரிமை © 2018. Kalpitiya Voice Sample -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Designed by : MohamedWebSolution (0717548338)